15வது சேக் சையது புத்தக விருது
May 14 , 2021
1169 days
585
- மும்பையில் பிறந்த டாக்டர் தஹேரா குத்புதீன் என்பவர் சிகாகோ பல்கலைக் கழகத்தில் அரபு மொழி இலக்கியப் பேராசியராகப் பணியாற்றுபவராவார்.
- இவர் 15வது சேக் சையது புத்தக விருதினைப் பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபராவார்.
- இந்த விருதானது அரபு நாடுகளின் நோபல் பரிசாக கருதப்படுகிறது.
- “Arabic Oration – Art and Foundation” எனும் தனது சமீபத்திய புத்தகத்திற்காக இவருக்கு இந்த விருது வழங்கப் பட்டுள்ளது.
- இந்தப் புத்தகமானது 2019 ஆம் ஆண்டில் ‘லெய்டன் ப்ரில் அகாடெமிக் பப்ளிசர்ஸ்’ எனும் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/14-316.jpg)
Post Views:
585