15வது ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாடு
November 25 , 2020
1378 days
593
- இது 2020 ஆம் ஆண்டில் நடைபெறும் இரண்டாவது ஜி20 தலைவர்கள் கூட்டமாகும்.
- இந்த உச்சி மாநாட்டின் தலைமை சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் ஆவார்.
- இதன் கருத்துரு '21 ஆம் நூற்றாண்டின் அனைவருக்குமான வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது' என்பதாகும்.
- சவூதி அரேபியா மற்றும் இத்தாலியுடன் ஜி20 முத்தரப்பு குழுவின் ஒரு பகுதியாக இந்தியா இருக்கும்.
- இது மூன்று உறுப்பினர் நாடுகளைக் கொண்ட ஒரு குழுவாகும்.
- இது தற்போதைய, முந்தைய மற்றும் அடுத்து தலைமை தாங்கும் நாடுகளால் ஆனது.
- ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை 2020 ஆம் ஆண்டின் டிசம்பர் 1 ஆம் தேதி இத்தாலி நாடு மேற்கொள்ளும்.
- 2021 ஆம் ஆண்டின் உச்சி மாநாடு இத்தாலியின் ரோம் நகரில் நடத்த திட்டமிடப் பட்டு உள்ளது.
- இந்தோனேசியா இந்த மாநாட்டை 2022 ஆம் ஆண்டில் நடத்த இருக்கின்றது.
- இந்தியா இந்த மாநாட்டை 2023 ஆம் ஆண்டில் டெல்லியில் நடத்த இருக்கின்றது.
Post Views:
593