தாய்லாந்தின் பாங்காக்கில் நடத்தப்பட்ட 16வது ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொண்டார்.
“இந்தியாவின் கிழக்கு நோக்கியக் கொள்கை மற்றும் அண்டை நாடுகள் முதலில்” ஆகிய கொள்கைகளுக்காக மியான்மரின் முக்கியத்துவத்தை இந்தியப் பிரதமர் எடுத்துரைத்தார்.
CLMV நாடுகளுக்கான (கம்போடியா, லாவோஸ், மியான்மர் மற்றும் வியட்நாம்) வணிக நிகழ்ச்சியை 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் யாங்கோனில் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தியாவும் இந்தோனேசியாவும் தமது இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவை அனுசரித்தன.
இந்தியப் பிரதமர் பாங்காக்கில் நடைபெற்ற 'சவாஸ்தீ பிரதமர் மோடி' என்ற நிகழ்ச்சியில் இந்தியச் சமூகத்தினரிடையே உரையாற்றினார்.
தாய் மொழியில், ‘சவாஸ்தீ’ என்ற சொல்லானது வாழ்த்துகளுக்கும் விடை பெறுவதற்கும் பயன்படுத்தப் படுகின்றது.
இந்த உச்சிமாநாட்டைத் தொடர்ந்து தாய்லாந்தில் நடைபெற்ற மற்ற உச்சி மாநாடுகள் பின்வருமாறு:
35வது ஆசியான் உச்சி மாநாடு,
14வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு மற்றும்
விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டமைப்பின் (RCEP - Regional Comprehensive Economic Partnership) 3வது கூட்டம்.