17வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடானது, மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரில் நடைபெறவுள்ளது.
பூடான் நாட்டினைச் சேர்ந்த ஒரு கல்வியாளர், புருனே நாட்டினைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மற்றும் எத்தியோப்பியா, இஸ்ரேல் மற்றும் போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த உள்ள பொதுச் சேவை சார்ந்த சமூக ஆர்வலர்கள் உட்பட 27 நபர்கள் 2023 ஆம் ஆண்டிற்கான பிரவாசி பாரதிய சம்மான் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பிரவாசி பாரதிய சம்மான் விருதானது, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படுகிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கௌரவ விருது இது ஆகும்.