TNPSC Thervupettagam

18வது EAS உச்சி மாநாடு

September 16 , 2023 308 days 221 0
  • 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு (EAS) ஆனது இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்றது.
  • இதற்கு இந்தோனேசிய அதிபர் H.E. ஜோகோ விடோடோ தலைமை தாங்கினார்.
  • கிழக்கு ஆசிய உச்சி மாநாடு (EAS) ஆனது அதன் உறுப்பினர் நாடுகளுக்கிடையே அரச முறை ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பிற்கான ஒரு தளமாகச் செயல்படுகிறது.
  • இது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (ஆசியான்) 10 உறுப்பு நாடுகளோடு, ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, தென் கொரியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய எட்டு முக்கியப் பங்குதாரர்களையும் உள்ளடக்கிய 18 உறுப்பினர்களை கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்