1994 ஆம் ஆண்டு ருவாண்டாவில் நடைபெற்ற டுட்சிகளுக்கு எதிரான இனப் படுகொலையின் சர்வதேசப் பிரதிபலிப்பு தினம் 2025 - ஏப்ரல் 07
April 16 , 2025 3 days 20 0
இது ருவாண்டாவில் டுட்சிகளுக்கு எதிரான 1994 ஆம் ஆண்டு இனப்படுகொலையின் சர்வதேச பிரதிபலிப்பு தினத்தை நினைவு கூருகிறது.
ருவாண்டாவில் டுட்சிகளுக்கு எதிரான இனப்படுகொலையானது, 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 07 ஆம் தேதியன்று, அங்குள்ள ஹூட்டு பெரும்பான்மை அரசாங்கத்தின் சில உறுப்பினர்களால் தொடங்கப்பட்டது.
ருவாண்டாவில் டுட்ஸி மற்றும் ஹுட்டு ஆகிய இரண்டு மிகப்பெரிய இனச் சமூகங்கள் ஆகும்.
1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 07 முதல் ஜூலை மாதம் வரையிலான சுமார் 100 நாள் காலப் பகுதியில் 800,000க்கும் மேற்பட்ட ருவாண்டன்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப் பட்டு உள்ளது.