மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஜுவாரி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் புதிய பாலத்தின் முதல் கட்ட கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இது வடக்கு கோவாவில் உள்ள பாம்போலிம் மற்றும் தெற்கு கோவாவில் உள்ள வெர்னா ஆகிய பகுதிகளை இணைக்கிறது.
இது கோவா மாநிலத்தில் உள்ள பன்ஜிம்-மங்களூர் பிரிவில் அமைந்துள்ள NH-17/NH-66 சாலையில் அமைந்துள்ளது.
இந்தப் பாலம் ஆனது வடக்கு மற்றும் தெற்கு கோவா இடையேயான பயண நேரத்தை குறைக்கும்.