இருவாய்ச்சி திருவிழாவின் 20வது பதிப்பானது நாகாலாந்தில் உள்ள நாகா பாரம்பரிய கிசாமாவில் தொடங்கியது.
நாகாலாந்து அரசால் ஏற்பாடு செய்யப்படும் இந்தத் திருவிழாவானது அம்மாநிலத்தின் பாரம்பரிய மற்றும் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு வருடாந்திர சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வாகும்.
இந்தத் திருவிழாவின் தொடக்க விழாவானது அம்மாநில ஆளுநரான ஆர்.என்.ரவியினால் தலைமை தாங்கப்பட்டது. இத்திருவிழாவின் போது “நாகாலாந்தின் வண்ணங்கள்” என்ற கருத்துருவுடன் நாகாலாந்தின் கலாச்சாரமானது காட்சிப் படுத்தப்பட்டது.