TNPSC Thervupettagam

2017ஆம் ஆண்டின் சிறந்த நல்லாசிரியருக்கான தேசிய விருது

August 26 , 2018 2186 days 700 0
  • கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலுமிச்சம்பட்டியில் மதுக்கரை பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியரானசத்தி 2017ஆம் ஆண்டின் சிறந்த நல்லாசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவ்விருது மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தினால் வழங்கப்படுகிறது.
  • இவ்விருதானது ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்களால் வழங்கப்படவிருக்கிறது.
 
  • இவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 45 நபர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சத்தி என்ற ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • சமீபத்தில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது தேசிய விருதுகளுக்கு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
  • தற்பொழுது அரசு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களுடைய பெயர்களை நேரடியாக ஆசிரியர்களுக்கான தேசிய விருதுக்கு அனுப்பலாம்.
  • இதற்கு முன் ஆசிரியர்களின் பெயர்களை மாநில அரசு தேர்ந்தெடுத்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்