TNPSC Thervupettagam

2017 ஆம் ஆண்டு சதுப்பு நில விதிகளின் கீழ் ஊட்டி ஏரி

July 15 , 2024 3 days 134 0
  • தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையமானது, 2017 ஆம் ஆண்டு சதுப்பு நிலங்கள் (வளங் காப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின் கீழ் ஊட்டி ஏரி பாதுகாக்கப்பட வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NGT) தெற்கு அமர்விடம் தெரிவித்துள்ளது.
  • நீலகிரி மாவட்ட நிர்வாகம், இந்த ஏரி மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும், அதனை ஒரு சதுப்பு நிலமாகக் கருத முடியாது என்றும் அமர்வு முன்னதாக வாதிட்டது.
  • 2.25 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இந்த ஏரியானது, 2011 ஆம் ஆண்டு தேசிய ஈர நிலப் பதிவேடு மற்றும் மதிப்பீட்டு அறிக்கையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இதன் விளைவாக, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி 2017 ஆம் ஆண்டு விதிகளின் 4வது விதியின் கீழ் இந்த ஏரி பாதுகாக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்