2018 ஆம் ஆண்டின் துணிவிற்கான இலண்டன் பத்திரிக்கை சுதந்திர விருது
November 14 , 2018 2123 days 611 0
இந்தியாவைச் சேர்ந்த பகுதிநேரப் பத்திரிக்கையாளரான சுவாதி சதுர்வேதி 2018 ஆம் ஆண்டின் துணிவிற்கான இலண்டன் பத்திரிக்கை சுதந்திர விருதை வென்றுள்ளார்.
பாரீசை மையமாகக் கொண்ட Reporters Sans Frontier (RSF) அல்லது எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற அமைப்பின் (ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள) லண்டன் பிரிவினால் நடத்தப்பட்ட முதலாவது விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது இவர் இவ்விருதைப் பெற்றார்.
இவ்விருதிற்கு உலகம் முழுவதிலும் இருந்து 4 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் சுவாதி சதுர்வேதியும் ஒருவராவார்.
இவர் “ I am a Troll : Inside the secret word of the BJP’s digital Army” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.