இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடு புகழ்பெற்ற 28வது சரஸ்வதி சம்மன் விருதினை தெலுங்கு மொழிக் கவிஞரான கே. சிவா ரெட்டிக்கு வழங்கினார்.
பக்காக்கி ஒட்டிகிலைட் (Turning Aside While Lying Down) என்ற தலைப்பைக் கொண்ட அவரது கவிதைத் தொகுப்பிற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்தக் கவிதைத் தொகுப்பானது 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
இந்த விருது பற்றி
இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் எழுதப்பட்ட ஒரு சிறந்த உரைநடை அல்லது கவிதை இலக்கியப் படைப்புகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகின்றது.
சரஸ்வதி சம்மன் விருதானது 1991 ஆம் ஆண்டில் கே.கே. பிர்லா அறக்கட்டளையால் நிறுவப்பட்டது.
இந்த விருதானது 15 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பரிசைக் கொண்டுள்ளது.