TNPSC Thervupettagam

2018 ஆம் ஆண்டின் சரஸ்வதி சம்மன் விருதுகள்

October 1 , 2019 1763 days 703 0
  • இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடு புகழ்பெற்ற 28வது சரஸ்வதி சம்மன் விருதினை தெலுங்கு மொழிக் கவிஞரான கே. சிவா ரெட்டிக்கு வழங்கினார்.
  • பக்காக்கி ஒட்டிகிலைட் (Turning Aside While Lying Down) என்ற தலைப்பைக் கொண்ட அவரது கவிதைத் தொகுப்பிற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
  • இந்தக் கவிதைத் தொகுப்பானது 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
இந்த விருது பற்றி
  • இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் எழுதப்பட்ட ஒரு சிறந்த உரைநடை அல்லது கவிதை இலக்கியப் படைப்புகளுக்காக ஒவ்வொரு ஆண்டும்  இந்த விருது வழங்கப்படுகின்றது.
  • சரஸ்வதி சம்மன் விருதானது 1991 ஆம் ஆண்டில் கே.கே. பிர்லா அறக்கட்டளையால் நிறுவப்பட்டது.
  • இந்த விருதானது 15 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பரிசைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்