2019 ஆம் ஆண்டின் ஓட்டுநர் நகரங்களின் குறியீட்டின் படி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய இரண்டு இந்திய நகரங்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு உலகின் மிக மோசமான நகரங்களாக உள்ளன.
100 நாடுகளைத் தரவரிசைப் படுத்தியுள்ள இந்தக் குறியீடானது ஐரோப்பிய கார் பாகங்களின் சில்லறை விற்பனையாளரான மிஸ்டர் ஆட்டோ என்ற அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது.
கனடாவில் உள்ள கல்கரி என்ற நகரமானது உலகெங்கிலும் வாகனம் ஓட்டுவதற்கான சிறந்த நகரமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து துபாய் மற்றும் கனடாவைச் சேர்ந்த மற்றொரு நகரமான ஒட்டாவா ஆகியவை சிறந்த நகரங்களாக தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளன.
அதிக நெரிசல் மற்றும் மோசமான வாகனங்களின் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் மும்பை இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் (100வது இடத்தில்) உள்ளது. அதே நேரத்தில் இந்தப் பட்டியலில் கொல்கத்தா நகரமானது மும்பையை விட இரண்டு இடங்கள் முன்னிலை பெற்று 98வது இடத்தில் உள்ளது.