ஐக்கிய இராஜ்ஜியமானது 2019 ஆம் ஆண்டின் நேட்டோ அமைப்பின் (வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு - North Atlantic Treaty Organization/NATO) உச்சி மாநாட்டை லண்டனில் நடத்தியது.
2019 ஆம் ஆண்டானது இந்த உச்சி மாநாட்டின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது.
இது நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்களால் கலந்து கொள்ளப்பட்டது. இது நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் என்பவரால் தலைமை தாங்கப் பட்டது.
2018 ஆம் ஆண்டின் நேட்டோ உச்சி மாநாடானது பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடத்தப் பட்டது.
நேட்டோ
வட அட்லாண்டிக் கூட்டணியான நேட்டோ என்பது 29 வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயுள்ள ஒரு அரசுகளுக்கிடையேயான இராணுவக் கூட்டணியாகும்.
இது 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 அன்று வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்ட போது நிறுவப்பட்டது.