பூடானின் அன்னை ராணியான கியாலும் சங்கே சோடன் வாங்சுக் (Gyalyum Sangay Choden Wangchuck) என்பவர் 2020 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை விருதுக்காக தனிநபர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
“ஹெல்ப்ஏஜ் இந்தியா” என்ற நிறுவனமானது இந்த விருதின் நிறுவனம் சார்ந்த வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.
“ஹெல்ப்ஏஜ் இந்தியா” நிறுவனமானது கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள பின்தங்கிய மூத்த குடிமக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.
இந்த விருது 1981 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் உருவாக்கப் பட்டுள்ளது.
இது மக்கள் தொகை மற்றும் மகப்பேறு சுகாதாரத் துறைகளில் அளிக்கப் பட்ட சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கின்றது.