கிரண் மஜும்தார் ஷா என்பவர் 2020 ஆம் ஆண்டின் EY உலகத் தொழிலதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஹைப்ளக்ஸ் நிறுவனத்தின் ஒலிவியா லும் என்பவருக்குப் பிறகு இந்த விருதிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பெண் தொழிலதிபர் இவராவார்.
2014 ஆம் ஆண்டில் கோடக் மகேந்திராவின் உதய் கோடக் மற்றும் 2005 ஆம் ஆண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயண மூர்த்தி ஆகியோருக்குப் பிறகு இந்த விருதை வெல்லும் 3வது இந்தியர் இவராவார்.
கிரண் 1978 ஆம் ஆண்டில் “பயோகான்” என்ற உயிரி நொதியியல் நிறுவனத்தைத் தொடங்கினார்.