TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டின் வனவுயிர் புகைப்படக் கலைஞர் விருது

October 26 , 2020 1370 days 505 0
  • மகாராஷ்டிராவின் ஐஸ்வர்யா ஸ்ரீதர் என்பவர் இந்த விருதை வென்ற முதல் இந்தியர் ஆவார்.
  • அவரது புகைப்படம் 'லைட்ஸ் ஆஃப் பேஷன்' (Lights of Passion) என்று பெயரிடப் பட்டது.
  • இந்தப் புகைப்படமானது மேற்குத் தொடர்ச்சி மலையின் உட்பகுதியில் அருகிவரும் மின்மினிப் பூச்சிகளை மையமாகக் கொண்டுள்ளது.
  • இவர் முதுகெலும்புகளற்ற உயிரினங்களின் நடத்தை’ (Behaviour-Invertebrates) எனும் பிரிவின் கீழ் இவ்விருதை வென்றார்.
  • இது லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்குச் சொந்தமான ஒரு வருடாந்திர பன்னாட்டு வனவுயிர் (வனவிலங்கு) புகைப்படம் எடுத்தல் போட்டி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்