நைஜரின் தற்போதைய அதிபரான மகமாடோவ் இசோஃபோவ் (Mahamadou Issoufou) அவர்கள் ஆப்பிரிக்கத் தலைமைத்துவத்தில் சாதனை பெற்றதற்காக 2020 ஆம் ஆண்டிற்கான இப்ராஹிம் பரிசை வென்றுள்ளார்.
இந்தப் பரிசானது 2006 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது. அது முதல் இப்பரிசை வென்ற 6வது வெற்றியாளர் இவராவார்.
69 வயதான இசோபோவ் அவர்கள் நைஜரில் இரண்டு முறை அதிபராகப் பதவி வகித்த பின்பு, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அப்பதவியில் இருந்து வெளியேற உள்ளார்.
இவர் முதன்முறையாக 2011 ஆம் ஆண்டில் அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டில் மீண்டும் அந்நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.