2020 ஆம் ஆண்டிற்கான மோஹுன் பாகன் ரத்னா விருதானது முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் மற்றும் மேற்கு வங்காள முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளரான பாலாஷ் நந்திக்கு வழங்கப்பட இருக்கிறது.
கால்பந்து விளையாட்டைச் சார்ந்த யாருக்கும் மோஹுன் பாகன் ரத்னா விருதானது வழங்கப் படாதது இதுவே முதல் முறையாகும்.
பழம்பெரும் ஹாக்கி வீரரான அசோக் குமாருக்கு கொல்கத்தா நகரக் கால்பந்து குழுவான மோஹுன் பாகன் விளையாட்டுக் குழுவினால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டுள்ளது.
இவர் 1975 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணியின் முக்கிய வீரராவார்.
அசோக் குமார் சிறந்த ஹாக்கி வீரரான தியான் சந்தின் மகன் ஆவார்.