உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று புவி நேரம் கொண்டாடப் படுகிறது.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கும், ஒரு மேம்பட்ட கோள் எனும் நிலையை அடைவதற்கான செயல்பாட்டிற்கும் ஆதரவு அளிப்பதற்காக வேண்டி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “புவியைக் காப்பதற்கான பருவநிலை மாற்றம்” என்பதாகும்.
புவி நேரம் என்பது சர்வதேச இயற்கை நிதியத்தினால் (WWF – World Wide Fund for Nature) ஒருங்கிணைக்கப்படும் ஒரு நிகழ்வாகும்.
இந்தத் தினமானது இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு மின் விளக்குகளை அணைப்பதற்காக தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் வணிகர்கள் ஆகியோரை ஊக்குவிக்கிறது.
இது மின் விளக்குகளை அணைத்திடும் ஒரு நிகழ்வாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 2007 ஆம் ஆண்டு துவக்கப் பட்டது.