சிறந்த நிலையான நீர்மின் நிலைய மேம்பாட்டுத் திட்டத்திற்கான 2021 IHA புளூ பிளானட் பரிசானது இந்தியாவின் 510 MW திறனுடைய தீஸ்தா – V நீர்மின்நிலையத் திட்டத்திற்கு வழங்கப் பட்டுள்ளது.
இந்த நீர்மின்நிலையமானது தேசிய நீர் மின்னாற்றல் கழக நிறுவனத்தினால் இயக்கப் படுகிறது.
இந்தப் பரிசானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக நீர் மின்னாற்றல் மாநாட்டில் சர்வதேச நீர் மின்னாற்றல் கூட்டமைப்பினால் வழங்கப் படுகிறது.
தீஸ்தா – V நீர்மின் நிலையமானது சிக்கிம் மாநிலத்தில் பாயும் தீஸ்தா நதியில் அமைக்கப் பட்டுள்ளது.