நார்வே நாட்டின் நோபல் குழுவானது மரியா ரேசா மற்றும் டிமிட்ரி முரட்டோவ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசினை வழங்க முடிவு செய்துள்ளது.
ஜனநாயகம் மற்றும் நீடித்த அமைதிக்கான முன்னிலையாக விளங்கும் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளுக்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலவும் அதிகார துஷ்பிரயோகம், வன்முறையைக் கையாளுதல் மற்றும் அதிகரித்து வரும் சர்வாதிகாரம் போன்றவற்றை வெளிப்படுத்த மரியா ரேசா கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்தினார்.
ரஷ்யாவில் அதிகரித்து வரும் சவால் மிக்க சூழ்நிலைகளிலும் பல தசாப்தங்களாக பேச்சுச் சுதந்திரத்தினை டிமிட்ரி முரட்டோவ் காத்து வருகிறார்.