TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டு முதல் உருவான புதிய புத்தொழில் நிறுவனங்கள்

June 12 , 2024 36 days 139 0
  • 2021 ஆம் ஆண்டில் புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து மொத்தம் 6,384 புத்தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளன.
  • 2021 ஆம் ஆண்டு வரை, மாநிலம் முழுவதும் உருவாக்கப்பட்ட மொத்த புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,032 ஆக இருந்தது.
  • புதிய அரசாங்கம் ஆனது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்கக் கொள்கையை வெளியிட்டது.
  • இன்றைய நிலவரப்படி நம் மாநிலத்தில் உள்ள மொத்தப் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 8,416 ஆக ஆகும்.
  • பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை, 2021 ஆம் ஆண்டில் 966 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 3,163 ஆக உயர்ந்துள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னையில் உலகளாவியப் புத்தொழில் நிறுவனங்கள் உச்சி மாநாடு நடத்தப் படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்