R. விஷ்ணு பிரசாத் "2022 ஆம் ஆண்டின் மிகவும் புகழ்பெற்ற அறிவியலாளர்" என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
இவர் 69 காப்புரிமைகள் கொண்ட அறிவியலாளர் ஆவார்.
இது கலாச்சாரம், அறிவியல், விளையாட்டு மற்றும் புதுமை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்தப் பங்களிப்பிற்காக தனிநபர்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் விருதாகும்.
டாக்டர் பிரசாத் சர்வதேசப் பத்திரிகைகளில் 300க்கும் மேற்பட்ட அளவில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள நிலையில் அவரது கண்டுபிடிப்புகளுக்கு மேலும் பல காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பங்களிப்புகளுக்காக இந்தியாவின் உயரிய விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு உட்பட பல மதிப்பு மிக்க விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.