தனது நெருங்கிய நட்பு நாடான சீனாவின் செயற்கைக்கோள் ஏவு வசதிகளைப் பயன்படுத்தி 2022 ஆம் ஆண்டில் தனது முதல் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பப் போவதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில், கோபி பாலைவனத்தில் அமைந்துள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து சீனாவின் லாங் மார்ச் விண்கலன் மூலம் தனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு செயற்கைக் கோள்களைப் பாகிஸ்தான் ஏவியது.
அவற்றில் ஒன்று தொலையுணர் செயற்கைக்கோள் ஆகும். இது இரட்டை நோக்கம் கொண்ட பூமிக் கண்காணிப்பு மற்றும் ஒளியியல் செயற்கைக்கோள் ஆகும்.
PAK-TES-1A என்பது நாட்டில் செயற்கைக்கோள் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதற்காக ஏவப்பட்ட இரண்டாவது சோதனை செயற்கைக்கோளாகும்.