TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டு வருடாந்திரக் கல்வி நிலை அறிக்கை கணக்கெடுப்பு - முக்கியத் தகவல்கள்

January 20 , 2024 182 days 177 0
  • இந்த ஆண்டு கணக்கெடுப்பு ஆனது, கிராமப்புற இந்தியாவில் உள்ள 14 முதல் 18 வயதுடைய சிறார்கள் மீது கவனம் செலுத்துவதோடு இந்த வயதினர் குழு குறித்து கடைசியாக 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆய்வு ஒன்றும் செய்யப்பட்டது.
  • சுமார் 30% பேர் அவ்வப்போது தங்கள் பெற்றோருக்காக வேலை செய்கிறார்கள்.
  • 14 முதல் 18 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகளில் ஒருவரால் இன்னும் இரண்டாம் வகுப்பு நிலையிலான உரையை தங்களது பிராந்திய மொழியில் சரளமாக படிக்க முடியாத நிலை உள்ளது.
  • இந்த வகையில் கல்விச் சேர்க்கை பிரிவுகள் அனைத்திலும் சிறுவர்களை விட சிறுமிகள் சிறப்பான செயல் திறனைக் கொண்டுள்ளனர்.
  • சிறுவர்களை விட, அதிக எண்ணிக்கையிலான சிறுமிகள் 12 ஆம் வகுப்புக்குப் பிறகும் தொடர்ந்து படிக்க விரும்புகிறார்கள்.
  • பாதிக்கும் மேற்பட்டவர்கள், 8 ஆம் வகுப்பு அல்லது 9 ஆம் வகுப்பில் பொதுவாக எதிர் பார்க்கப்படும் திறன் ஆன வகுத்தல் திறனறிவு இன்றி (3 இலக்க எண்ணை ஒரு இலக்க எண்ணால் வகுத்தல்) உள்ளனர்.
  • சுமார் 57% பேர் ஆங்கில மொழி வாக்கியங்களைப் படிக்கக் கூடியவர்களாகவும்; அவர்களில் 73 சதவீதத்திற்கும் அதிகமானோர் அவற்றின் பொருளை சொல்லக் கூடியவர்களாகவும் உள்ளனர்.
  • எண்கணிதம் மற்றும் ஆங்கில மொழி வாசிப்பு ஆகிய இரண்டிலும் சிறுமிகளை விட சிறுவர்கள் சிறப்பான செயல்திறன் கொண்டுள்ளனர்.
  • கணக்கெடுக்கப்பட்ட 90% வீடுகளில் திறன் பேசிகள் இருந்தன.
  • கணக்கெடுக்கப்பட்ட குழந்தைகளில், சுமார் 95% சிறுவர்கள் மற்றும் 90% பெண்கள் திறன் பேசிகளைப் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளனர்.
  • 'அடிப்படை' ASER கணக்கெடுப்பு ஆனது முதன்முதலில் 2005 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டதோடு மேலும் 2014 ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் நடத்தப் பட்டது.
  • 2014 ஆம் ஆண்டு முதல் இது 2016 ஆம் ஆண்டில் மாற்று (மாறுநிலை) ஆண்டு சுழற்சி முறைக்கு மாற்றப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்