TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டிற்கான இறங்குமுகக் கணிப்பு : உலகளாவிய மாறுபக்க கொழுப்புப் பொருள் ஒழிப்பு – 2020 மீதான உலக சுகாதார நிறுவன அறிக்கை

September 15 , 2020 1405 days 1174 0
  • 58 நாடுகள் 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருளிலிருந்து 3.2 பில்லியன் மக்களைப் பாதுகாப்பதற்கானச் சட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • ஆனால் இன்னும் 100ற்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது உணவு விநியோகத்திலிருந்து இந்தத் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • 15 நாடுகள் மாறுபக்க கொழுப்பை உட்கொள்வதின் காரணமாக  உலகளாவிய இறப்பில் மூன்றில் இரண்டு மடங்கிற்குக் காரணமாக உள்ளன.
  • இந்த 15 நாடுகளில், கனடா, லாட்வியா, ஸ்லோவேனியா மற்றும் அமெரிக்கா ஆகியவை 2017 ஆண்டு முதல் WHO (World Health Organisation) பரிந்துரைத்த சிறந்த நடைமுறைக் கொள்கைகளைச் செயல்படுத்தியுள்ளன.
  • மீதமுள்ள 11 நாடுகளான அசர்பைஜான், வங்க தேசம், பூடான், ஈகுவேடர், எகிப்து, இந்தியா, ஈரான், மெக்சிகோ, நேபாளம், பாகிஸ்தான், கொரியக் குடியரசு ஆகியவை விரைவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவின் நடவடிக்கை

  • 2011 ஆம் ஆண்டில் இந்தியாவானது எண்ணெய் மற்றும் கொழுப்பில் 10% என்ற அளவிற்கு TFA (Trans fatty acids) வரம்பை நிர்ணயித்தது. மேலும் இது 2015 ஆண்டில் 5% ஆகக் குறைக்கப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI - Food Safety and Standards Authority of India) இந்த வரம்பை 2% ஆகக் குறைத்தது. மேலும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மாறுபக்க கொழுப்பை உலகளாவிய இலக்கிற்கு 1 ஆண்டிற்கு முன்னதாகவே, அதாவது 2022 ஆம் ஆண்டில் உணவுச் சங்கிலியிலிருந்து ஒழிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், FSSAI ஆனது உலகளாவிய சிறந்த நடைமுறையுடன் இந்தியாவில் ஒழுங்குமுறை ஒன்றிப் பொருந்தும் வகையில் பரிந்துரைத்துள்ளது. இது 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் 2% TFA என்ற வரம்பு பொருந்தும் வகையில் பொதுக் கருத்து வரைவு ஒழுங்குமுறையை வெளியிட்டுள்ளது.
  •  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்