TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டில் அதிகபட்ச ஊழல் புகார்கள்

September 13 , 2024 18 days 59 0
  • கடந்த ஆண்டு மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (CVC) பதிவான மொத்த ஊழல் புகார்களில், இரயில்வே ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் தான் அதிகமாகும்.
  • அதனைத் தொடர்ந்து டெல்லியின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • 2023 ஆம் ஆண்டில் அனைத்து வகை அதிகாரிகள் /ஊழியர்களுக்கு எதிராக 74,203 ஊழல் புகார்கள் பெறப் பட்டுள்ளன.
  • 66,373 புகார்கள் தீர்க்கப் பட்டு 7,830 புகார்கள் நிலுவையில் உள்ளன.
  • இரயில்வே ஊழியர்களுக்கு எதிராக அதிகபட்சமாக 10,447 புகார்களும், அதைத் தொடர்ந்து "GNCTD தவிர" பிற உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு எதிராக 7,665 புகர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • 2023 ஆம் ஆண்டில் பொதுத் துறை வங்கிகளின் ஊழியர்களுக்கு எதிராக 7,004 ஊழல் புகார்கள் பெறப்பட்டுள்ளன.
  • இவற்றில் 6,667 புகார்கள் தீர்க்கப் பட்டு 337 புகார்கள் நிலுவையில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்