TNPSC Thervupettagam

2023 ஆம் ஆண்டு 204 புலிகளின் இழப்பு

December 31 , 2023 201 days 265 0
  • இந்தியாவானது இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 25 வரை 204 புலிகளை இழந்துள்ளது.
  • இந்திய மாநிலங்களில் 52 புலிகளின் இறப்புகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து இந்தியாவில் அதிக புலிகளைக் கொண்ட மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் 45 புலிகள் உயிரிழந்துள்ள நிலையில், 26 புலிகளின் இறப்புகளுடன் உத்தரகாண்ட் அடுத்த இடத்தில் உள்ளது.
  • தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தலா 15 புலிகளின் இறப்புகள் பதிவாகியுள்ளன.
  • இந்த ஆண்டு இறப்புகள் கடந்த பத்தாண்டுகளில் மிக அதிகமானதாக உள்ளதாக சில ஊடகங்களின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
  • 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் இந்தியப் புலிகளின் எண்ணிக்கையானது 200 அதிகரித்துள்ளது.
  • இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையானது 2018 ஆம் ஆண்டில் 2,967 ஆகவும், 2022 ஆம் ஆண்டில் 3,167 ஆகவும் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்