TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்

July 26 , 2024 12 hrs 0 min 78 0
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், தொடர்ந்து ஏழாவது முறையாக 2024-25 ஆம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையினை ஜூலை 23 ஆம் தேதியன்று தாக்கல் செய்தார்.
  • இதனால், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை அவர் முறியடித்து உள்ளார்.
  • கடன்கள் தவிர்த்து மொத்த வரவுகள் மற்றும் மொத்தச் செலவினங்கள் முறையே 32.07 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 48.21 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • நிகர வரி வரவுகள் 25.83 லட்சம் கோடி ரூபாயாகவும், நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9% ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும், அரசாங்கம் அடுத்த ஆண்டு நிதிப் பற்றாக்குறையை 4.5 சதவீதத்திற்கும் கீழ் எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • 2024-25 ஆம் நிதியாண்டில் தேதியிடப்பட்ட பத்திரங்கள் மூலம் மொத்த மற்றும் நிகரச் சந்தைக் கடன்கள் முறையே 14.01 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 11.63 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • அவர் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் மூன்று புதிய ஊழியர்கள் சார்ந்த ஊக்கத் திட்டங்களை அறிவித்துள்ளார்.
  • எந்தவொரு அரசாங்கத் திட்டங்களிலிருந்தும் இது வரை பயனடையாத மாணவர்கள் உள்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் கல்வி பெறுவதற்காக 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவிக் கடன்களைப் பெறுவர்.
  • 2025 ஆம் நிதியாண்டில் புதிய வருமான வரி வரம்புகளின் கீழ், சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நிலையான வரி விலக்கு வரம்பானது 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
  • தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை சுங்க வரியினை 6 சதவீதமாகவும், பிளாட்டினம் மீது 6.4 சதவீதமாகவும் குறைக்க இந்த நிதிநிலை அறிக்கையில் முன் மொழியப்பட்டது.
  • நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கை உரையில் பீகார் மாநிலத்திற்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தார் என்பதோடு இந்தத் திட்டங்கள் "பூர்வோதயா" என்ற பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இது பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களின் அனைத்து மேம்பாடுகளையும் உள்ளடக்கியது.
  • பீகாரில் மொத்தம் 26,000 கோடி ரூபாய் செலவில் அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்க அரசாங்கம் நிதியுதவி அளிக்கும்.
  • பெண்கள் தலைமையிலான மேம்பாட்டினை ஊக்குவிப்பதற்காக, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பயனளிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்காக வேண்டிஇந்த நிதிநிலை அறிக்கையில் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது.
  • ஆரம்ப நிலை பூஜ்ஜியம் முதல் 3 லட்சம் ரூபாய் வரையிலான வரிவிகித வரம்பைத் தவிர்த்து, மற்ற ஒவ்வொரு வரி வரம்புகளின் அளவும் மாறாமல் இருப்பதையடுத்து வரி விதிப்பு விகிதம் மாறாமல் உள்ளது.
  • முன்பு 3 லட்சம் ரூபாயிலிருந்து 6 லட்சம் ரூபாய் ஆக இருந்த வரம்பானது தற்போது 3 லட்சம் ரூபாயிலிருந்து 7 லட்சம் ரூபாயாக விரிவுபடுத்தப் படும்.
  • இருப்பினும், 5% என்ற வரிவிதிப்பு விகிதம் ஆனது மாறாமல் உள்ளது.
  • இதே போல், மற்ற அடுக்குகள், அதாவது 6 முதல் 9 லட்சம் ரூபாய், 9 முதல் 12 லட்சம் ரூபாய், 12 முதல் 15 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் என்ற வரம்பானது 7 முதல் 10 லட்சம் ரூபாய், 10 முதல் 12 லட்சம் ரூபாய், 12 முதல் ரூபாய் 15 லட்சம் மற்றும் அதற்கு மேல் என்ற வரம்புகளாகத் திருத்தியமைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்