TNPSC Thervupettagam

2024 ஆம் ஆண்டு மக்களாட்சிக்கான உச்சி மாநாடு

March 25 , 2024 116 days 232 0
  • மூன்றாவது மக்களாட்சிக்கான உச்சி மாநாடு (S4D3) ஆனது, தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்றது.
  • முதன்முறையாக அமெரிக்காவிற்கு வெளியே வேறொரு நாட்டில் நடத்தப்பட்ட இந்த உச்சி மாநாடு ஆனது, மக்களாட்சி (ஜனநாயகம்) பற்றிய கருத்தை உலகளவில் நன்கு பரப்புவதை நோக்கமாகக் கொண்டது.
  • இந்நிகழ்வின் கருத்துரு, “எதிர்காலச் சந்ததியினருக்கான மக்களாட்சி” என்பதாகும்.
  • இந்த ஆண்டிற்கான உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் ஆனது, மக்கள் மத்தியில் ஏற்படும் தவறான தகவல் பரவல், செயற்கை நுண்ணறிவு மற்றும் போலிப் பதிவுகள் உள்ளிட்ட எண்ணிம ஊடகம் சார்ந்த அச்சுறுத்தல்களை மையமாகக் கொண்டது.
  • அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 2021 ஆம் ஆண்டில் இந்த உச்சி மாநாட்டினை நிறுவச் செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்