TNPSC Thervupettagam

2024 ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் ஈவுகள்

May 23 , 2024 56 days 155 0
  • 2023 ஆம் நிதியாண்டினை விட 2024 ஆம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து (PSBs) சுமார் 30 சதவீதம் கூடுதல் ஈவுகளை அரசாங்கம் பெறும்.
  • முந்தைய நிதியாண்டில் 13,804 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் ஈவுப் பங்கானது 2024 ஆம் நிதியாண்டில் மொத்தமாக 18,013 கோடியாக இருக்கும்.
  • இந்தக் கணக்கீடு ஆனது 15 சதவீதப் பங்குப் பங்கீட்டு வரியை கணக்கில் எடுத்துக் கொள்ளாது என்பதோடு அதுவும் அரசாங்கத்திற்கேச்  செல்லும்.
  • 12 பொதுத் துறை வங்கிகளில், 10 வங்கிகள் பங்குகளை அறிவித்துள்ளன.
  • 2024 ஆம்  நிதியாண்டில் அதிகப் பங்குகளை (முக மதிப்புடன் ஒப்பிடும் போது) செலுத்தும் முதல் நான்கு பொதுத் துறை வங்கிகள் - பாரத ஸ்டேட் வங்கி (SBI), பரோடா வங்கி (BoB), கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகியனவாகும்.
  • சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது ஈவுப் பங்குகளை அறிவிக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்