இந்திய அரசாங்கம் ஆனது மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கினைக் குறைக்க திட்டமிட்டு வருகிறது.
இந்திய நிதி ஆணையம் ஆனது, மத்திய-மாநில நிதி உறவுகளின் பிற அம்சங்களுடன் சேர்த்து, வரிப் பகிர்வு குறித்தும் பரிந்துரைகளை வழங்குகிறது.
அரவிந்த் பனகாரியா தலைமையிலான ஒரு குழு ஆனது, அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தனது பரிந்துரையைச் சமர்ப்பிக்கும் என்பதோடு இது 2026-27 ஆம் நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது 41% ஆக உள்ள மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி வருவாயின் பங்கைக் குறைந்தது 40% ஆகக் குறைக்க மத்திய அரசு பரிந்துரைக்க வாய்ப்புள்ளது.
வரி வருவாயில் மாநிலங்களின் பங்கில் 1% குறைப்பானது, மத்திய அரசுக்குச் சுமார் 3,500 கோடி ரூபாயை ஈட்டக்கூடும்.
1980 ஆம் ஆண்டில் 20% ஆக இருந்த மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் வரிகளின் பங்கு ஆனது தற்போது 41% ஆக அதிகரித்துள்ளது.