பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, ஒடிஷாவின் பூரி நகரிலுள்ள சாரதாபாலி என்னுமிடத்தில் நடைபெற்ற 20வது நாட்டுப்புறக் கண்காட்சி (தேசியப் பழங்குடியினர் / நாட்டுப்புறப் பாடல் மற்றும் நடன விழா) மற்றும் 13வது கிரிஷி கண்காட்சி 2022 ஆகியவற்றினைத் தொடங்கி வைத்தார்.
இந்த இரண்டுக் கண்காட்சிகளும் முறையே பழங்குடியினரின் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் வேளாண்மையில் புதுமைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றினை நோக்கமாகக் கொண்டதாகும்.
வேளாண்மை தொடர்பான புதுமைகள், தயாரிப்புகள், தீர்வுகள் மற்றும் சேவைகளைக் கொண்ட அனைத்து அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் கிருஷி கண்காட்சி ஒரு தளமாகும்.