TNPSC Thervupettagam

29-வது கடல்சார் எல்லைக்கோடு சந்திப்பு

May 9 , 2018 2266 days 667 0
  • இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான 29-வது கடல்சார் எல்லைக்கோடு (Indo-Sri Lanka Maritime Boundary Line) சந்திப்பு இந்திய கடற்படைக் கப்பலான ‘சுமித்ராவில் நடைபெற்றது. இந்த சந்திப்பு இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ஜாப்னா மாவட்டத்தில் அமைந்துள்ள காங்கேசன் துறையில் ஆண்டுக்கு ஒருமுறை நடப்பதாகும்.
  • இந்த சந்திப்பானது இருநாட்டு கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைகளுக்கிடையே செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் உறவுகளைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 28-வது கடல்சார் எல்லைக்கோடு சந்திப்பு (Meeting) கடந்த ஆண்டு (2017) மே 19 அன்று இலங்கை கடற்படைக் கப்பலான ‘சயூராவில்’ நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்