31வது வியாஸ் சம்மான் விருதானது பிரபல இந்தி எழுத்தாளர் டாக்டர் அஸ்கர் வஜாஹத்துக்கு வழங்கப்பட்டது.
மகாபலி நாடகத்திற்காக இந்த மதிப்புமிக்க விருதிற்கு அவர் தேர்வு செய்யப் பட்டு உள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஓர் இந்தியக் குடிமகன் எழுதிய இந்தி மொழியின் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்காக K.K.பிர்லா அறக்கட்டளையினால் வியாஸ் சம்மான் விருது வழங்கப்படுகிறது.
ராம் விலாஸ் ஷர்மா தனது ‘பாரத் கே பிரச்சீன் பாஷா பரிவார் அவுர் ஹிந்தி’ என்றப் படைப்பிற்காக 1991 ஆம் ஆண்டு முதலாவது வியாஸ் சம்மான் விருதினைப் பெற்றார்.