இந்தியா மற்றம் நேபாளம் ஆகிய நாடுகள் தமது எல்லைகளுக்கிடையே வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காகவும் முறைப்படுத்துவதற்காகவும் வேண்டி நேபாள்கன்ஞ்ச்சில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியின் (ICP - Integrated check post) கட்டுமானத்தை இணைந்து தொடங்கியுள்ளன.
இந்திய – நேபாள எல்லையில் அமைந்த 3வது ICP இதுவாகும்.
இதே போன்ற வசதிகள் பிர்கன்ஞ் மற்றும் பிரத்நகரில் 2018 ஏப்ரல் மாதம் மற்றும் 2020 ஜனவரி மாதம் முதல் செயல்பட்டு வருகின்றன.
இந்திய அரசானது நேபாளத்தின் பைராஹாவில் 4வது ICPயின் கட்டுமானத்தைத் தொடங்க உள்ளது.
இந்தியாவானது வங்க தேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் இதே போன்ற ICPகளைக் கட்டமைத்து உள்ளது.