3வது ஜன் அவுசாதி திவாஸ் கொண்டாட்டங்கள் மார்ச் 01 ஆம் தேதியன்று தொடங்கியது.
இது மார்ச் 07 ஆம் தேதி வரை அனுசரிக்கப்பட இருக்கின்றது.
ஜன் அவுசாதி கேந்திராக்கள் நாடு முழுவதும் சுகாதாரச் சோதனை முகாம்களை நடத்தின.
இந்த மருத்துவச் சோதனை செயல்பாடுகள் சர்க்கரை அளவு சோதனை, இரத்த அழுத்தச் சோதனை, இலவச மருத்துவர் ஆலோசனை மற்றும் இலவச மருந்து விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவுசாதி பரியோஜனாவைச் செயல்படுத்தும் நிறுவனமான இந்தியாவின் மருந்து பொதுத் துறை முகமையானது 2021 ஆம் ஆண்டு மார்ச் 07 அன்று மூன்றாவது ஜன் அவுசாதி திவாஸ் தினத்தை அனுசரித்தது.
2021 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு, “சேவா பிஹி, ரோஜ்ஹர் பிஹி” (Seva bhi – Rozgar bhi) என்பதாகும்.
பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவுசாதி பரியோஜனா என்பது இந்திய அரசு மருந்துத் துறையின் ஒரு மிக முக்கிய முன்னெடுப்பாகும்.
இது தற்பொழுது குறைந்த விலையில் தரமான மருந்தினை அளிக்கும் நோக்கத்துடன் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.