TNPSC Thervupettagam

3வது தேசிய நீர் மேலாண்மை விருதுகள் 2020

January 10 , 2022 925 days 582 0
  • 2020 ஆம் ஆண்டிற்கான 3வது தேசிய நீர் மேலாண்மை விருதுகளை வென்ற இந்திய மாநிலங்களின் பெயர்களை மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்தார்.
  • இதில் சிறந்த மாநிலம் என்ற பிரிவில் தமிழ்நாடு மூன்றாம் பரிசைப் பெற்றது.
  • உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை முறையே முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை பெற்றன.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெள்ளப்புத்தூர் என்ற ஊராட்சி, ‘சிறந்த கிராமப் பஞ்சாயத்து - தென் மண்டலம்’ என்ற பிரிவில் இரண்டாம் பரிசினைப் பெற்றது.
  • மதுரை மாநகராட்சியானது, ‘சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி’ அமைப்பு என்ற பிரிவில் மூன்றாம் பரிசை வென்றது.
  • 'சிறந்தப் பள்ளி' என்ற பிரிவில், காவேரிப் பட்டினத்தின் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தினைப் பிடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்