TNPSC Thervupettagam

4வது தேசிய நீர் விருதுகள்

June 22 , 2023 397 days 355 0
  • ஜல் சக்தி அமைச்சகமானது 2022 ஆம் ஆண்டு தேசிய நீர் விருதுகளுக்கான இணை வெற்றியாளர்கள் உட்பட 11 பிரிவுகளை உள்ளடக்கிய மொத்தம் 41 வெற்றியாளர்களை அறிவித்தது.
  • தண்ணீரைப் பாதுகாப்பதற்காக பல்வேறு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் மேற் கொள்ளப்படும் நல்லப் பணிகளையும் முயற்சிகளையும் ஊக்குவிக்க இந்த விருதுகள் வழங்கப் படுகின்றன.
  • சிறந்த மாநிலப் பிரிவில் மத்தியப் பிரதேசம் முதல் பரிசினைப் பெற்றது.
  • ஒடிசா இரண்டாவது இடத்தையும், பீகார் மற்றும் ஆந்திரா மூன்றாவது இடத்தினையும் பகிர்ந்து கொண்டன.
  • சிறந்த மாவட்டப் பிரிவில் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்திற்கு விருது வழங்கப் பட்டு உள்ளது.
  • சிறந்த மாவட்டப் பிரிவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாமக்கல் மாவட்டம் 2வது பரிசு பெற்றது.
  • சிறந்த கிராமப் பஞ்சாயத்து விருதானது, தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் உள்ள ஜகன்னாதபுரம் கிராமப் பஞ்சாயத்துக்கு வழங்கப் பட்டது.
  • இந்தப் பிரிவில், தமிழ்நாடு மாநிலத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் கிராமப் பஞ்சாயத்து 2வது பரிசினைப்  பகிர்ந்து கொண்டது.
  • கௌஹாத்தியின் ஆகாஷ்வானி ஊடகப் பிரிவில் இரண்டாவது சிறந்த விருதினைப் பெற்றது.
  • சிறந்த தொழில்துறைப் பிரிவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரத்தில் அமைந்த அப்பல்லோ டயர்ஸ் லிமிடெட் நிறுவனமானது 3வது பரிசினைப் பகிர்ந்து கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்