TNPSC Thervupettagam

4வது BIMSTEC உச்சி மாநாட்டு அறிக்கை

September 1 , 2018 2181 days 660 0
  • பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு அமைப்பின் (BIMSTEC) நான்காவது மாநாடு நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் நடைபெற்றது.
  • ‘அமைதியான வளமான மற்றும் நிலையான வங்காளப் பிராந்தியத்தை நோக்கி‘ என்பதே இந்த மாநாட்டின் மையக் கருவாகும்.
  • இந்த உச்சிமாநாட்டில் நேபாள பிரதம மந்திரி கே.பி. ஷர்மா ஒலியால் வழங்கப்பட்ட 18-அம்சங்களைக் கொண்ட காத்மண்டு பிரகடனமானது, அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில், 5வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை இலங்கை நடத்தவிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்