ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது (FAO) மூன்று நாடுகளில் 4 ஆசியத் தேயிலை அறுவடைத் தளங்களை உலக அளவில் முக்கியமான வேளாண் தளங்களாக (Globally Important Agricultural Sites - GIAHS) அறிவித்துள்ளது.
அவை பின்வருமாறு:
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள பியூர் பாரம்பரிய தேயிலை வேளாண் அமைப்பு
பாரம்பரிய மரத் தாவர அமைப்பு – ஜப்பான்
புசோவ்ஹ் மல்லிகைத் தேயிலைத் தளம் – சீனா
பாரம்பரிய ஹடோங்க் தேயிலை வேளாண் அமைப்பு – தென் கொரியா
சீனாவில் உள்ள யுனான் மாகாணமானது உலகின் தேயிலைக்கான பிறப்பிடமாகக் கருதப் படுகின்றது.
உலகின் மிகப்பெரிய தேயிலை உற்பத்தியாளர் நாடு சீனா ஆகும், அதே சமயம் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் தேயிலைப் பயிரிடலானது 19 ஆம் நூற்றாண்டில் தான் ஆங்கிலேயரால் அறிமுகப் படுத்தப்பட்டது.
தேயிலை ஆனது இந்தியாவில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றது.