TNPSC Thervupettagam

4 மிகப்பெரிய சோதனைகள்

March 25 , 2020 1614 days 525 0
  • உலக சுகாதார அமைப்பானது கொரானா வைரஸ் சிகிச்சைகளின் ஒரு பகுதியாக 4 மிகப்பெரிய சோதனைகளைத் தொடங்கியுள்ளது.
  • இந்த 4 சோதனைகள் பின்வருமாறு.
    • வைரஸ் எதிர்ப்புக் கலவையான  ரெம்டெசிவிர்
    • மலேரியா சிகிச்சைக்குப் பயன்படும் மருந்தான குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்.
    • எச்ஐவி மருந்துகளான லோபினாவிர் மற்றும் ரிட்டோனாவிர் ஆகியவற்றின் கலவை.
    • லோபினாவிர் மற்றும் ரிட்டோனாவிர் கலவையுடன் இண்டர்பெரான் – பீட்டா என்ற மருந்து.
  • காங்கோவில் எபோலா நோய் வெடிப்பு ஏற்பட்ட போது எபோலா நோய்த் தொற்றிற்கு சிகிச்சை அளிப்பதற்காக ரெம்டெசிவிர் மருந்தானது கண்டுபிடிக்கப் பட்டது.
  • இந்த மருந்தானது இதர கொரானா வைரஸ்களான சார்ஸ் மற்றும் மெர்ஸ் ஆகியவற்றையும் தடுக்கும் திறன் கொண்டது என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்