TNPSC Thervupettagam

4 பொதுத்துறை வங்கிகளில் மூலதன முதலீடு

April 4 , 2021 1205 days 679 0
  • வட்டியில்லாப் பத்திரங்களை வங்கிகளுக்கு வழங்குவதன் மூலம் 2020-21 ஆம் ஆண்டில் அரசுக்குச் சொந்தமான நான்கு வங்கிகளில் ரூ.14,500 கோடியை மூலதன முதலீடு செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • அரசுக்குச் சொந்தமான அந்த நான்கு வங்கிகள்
    • சென்ட்ரல் இந்தியா வங்கி
    • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
    • பாங்க் ஆஃப் இந்தியா மற்றும்
    • UCO வங்கி
  • இது நடப்பு நிதியாண்டான 2020 – 21 ஆம் ஆண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு செலுத்த வேண்டிய மொத்த மூலதன முதலீட்டுத் தொகையான ரூ.20,000 கோடியை நிறைவு பெறச் செய்கிறது.
  • முன்னதாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் ரூ.5,500 கோடி முதலீடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்