பிரதமர் நரேந்திர மோடிக்கு அக்டோபர் மாதத்தில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையால் மதிப்புமிக்க ‘உலகளாவிய கோல்கீப்பர் விருது’ வழங்கப்பட இருக்கின்றது.
2014 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று தொடங்கப்பட்ட ஸ்வச் பாரத் அபியான் மீதான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அவரது தலைமைப் பண்பு காரணமாக அவர் இதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இந்த வருடாந்திர விருதுகள், ஐந்து பிரிவுகளாக, நீடித்த வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals - SDGs) அடைவதற்கான முயற்சிகளுக்காக தலைவர்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோருக்கு வழங்கப் படுகின்றன.
வகைகள்: முன்னேற்றம், மாற்றத்தை ஏற்படுத்துபவர், பிரச்சாரம், கோல்கீப்பரின் முயற்சி மற்றும் உலகளாவிய கோல்கீப்பர்.