TNPSC Thervupettagam

40 லட்சம் டன் நெல் கொள்முதல்

June 18 , 2023 399 days 226 0
  • தமிழ்நாடு மாநிலமானது நெல் கொள்முதலில் 40 லட்சம் டன்கள் வரம்பினைத் தாண்டி மும்முறை சாதனையினை எட்டியுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியன்றைய நிலவரப்படி, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவு 40 லட்சம் டன்களுக்கும் சற்று அதிகமாக இருந்தது.
  • சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை, 2011-12 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 23.87 லட்சம் டன்கள் என்ற அளவே இதுவரை இல்லாத அளவிலான அதிக கொள்முதலாகக் கருதப் பட்டது.
  • ஆனால் இது 2019-20 ஆம் ஆண்டில் 32.4 லட்சம் டன்கள் கொள்முதல் மேற்கொள்ளப்பட்ட போது இந்தச் சாதனையானது முறியடிக்கப்பட்டது.
  • இதைத் தொடர்ந்து 2020-21 ஆம் ஆண்டில் 44.9 லட்சம் டன்களும், 2021-22 ஆம் ஆண்டில் சுமார் 43.3 லட்சம் டன்களும் கொள்முதல் செய்யப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்