TNPSC Thervupettagam

4000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டப் பழமையான தங்கம்

September 26 , 2022 665 days 385 0
  • வடக்குப்பட்டு ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தொல்லியல் துறை அகழாய்வில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்கம் கிடைத்துள்ளது.
  • காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த ஒரகடம் கிராமத்தில் அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யப் பட்டது.
  • கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்கள், வர்ணம் பூசப்பட்ட மட்பாண்டங்கள் மற்றும் சின்னங்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் மற்றும் ரோமானிய மட்பாண்டங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன.
  • மேலும் 1.5 கிராம் எடையுள்ள 2 தங்க ஆபரணங்களும் இங்கு கிடைத்துள்ளன.
  • சிறு சிறு காதணிகள், தங்க ஆபரணங்கள், சிறு சிறு வட்ட வடிவச் சில்லுகள், இரும்புப் பொருட்கள் மற்றும் வளையல் துண்டுகள் ஆகியவையும் இங்கு கண்டுபிடிக்கப் பட்டு உள்ளன.
  • இவை 4000 ஆண்டுகள் முதல் 10000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்களாக இருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்