TNPSC Thervupettagam

41,000 ஆண்டுகள் பழமையான நெருப்புக் கோழி கூடு

July 5 , 2024 13 days 204 0
  • ஆந்திரப் பிரதேசத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 41,000 ஆண்டுகள் பழமையான நெருப்புக் கோழி கூடு ஒன்றைக் கண்டறிந்துள்ளனர் என்ற நிலையில், இது உலகிலேயே மிகவும் பழமையானதாகும்.
  • உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன பெரு விலங்கு இனங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • 40 கிலோவுக்கு மேல் எடையுள்ள விலங்குகள் - அதாவது குதிரைகள், யானைகள், கால் நடைகள் மற்றும் நீர்யானைகள் போன்ற பெரிய விலங்குகள் - பெருவிலங்கினம் என்று அழைக்கப்படுகின்றன.
  • முன்பு பழமையான நெருப்புக்கோழி முட்டை ஓடு ஆனது இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள சிவாலிக் மலைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
  • அவை 20 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்