இந்தியக் குடிமைக் கணக்கியல் சேவையானது (ICAS - Indian Civil Accounts Service) ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 01 அன்று “குடிமைக் கணக்கியல் தினத்தை” அனுசரிக்கின்றது.
2021 ஆம் ஆண்டானது 45வது குடிமைக் கணக்கியல் தினக் கொண்டாட்டங்களைக் குறிக்கின்றது.
ICAS என்பது மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் மத்திய செலவினத் துறையின் கீழ் உள்ள இந்தியக் குடிமைப் பணிகளில் ஒன்றாகும்.
ICAS
மத்திய அரசானது 1976 ஆம் ஆண்டில் பொது நிதியியல் மேலாண்மையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தைத் தொடங்கியது.
தணிக்கை மற்றும் கணக்கியல் பணிகள் மத்திய அரசின் கணக்குகளைத் தயாரிக்கும் பணியை மேற்கொண்ட இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியை, அப்பணியிலிருந்து விடுவித்ததன் மூலம் இது தனியாகப் பிரிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து, இந்தியக் குடிமைக் கணக்கியல் சேவையானது ஏற்படுத்தப் பட்டது.